சூரிய ஒளி மின்சாரம்
Solar Energy (or) Renewable Energy
சூரிய ஒளி மின்சாரம் குறித்த அனைத்து தகவல்களையும்
அறிந்துக்கொள்ள உதவும் தமிழின் முதல் இணையத்தளம்.....
அறிந்துக்கொள்ள உதவும் தமிழின் முதல் இணையத்தளம்.....
![Picture](/uploads/1/4/7/6/147617816/published/solar-system-with-battery.gif?250)
சூரிய ஒளி மின்சாரத்தை ஏன் பயன்படுத்த வேண்டும்?
![Picture](/uploads/1/4/7/6/147617816/published/power-sect.jpg?1701669690)
மின்சார பயன்பாட்டையும் மின்சார
உபகரணங்களின் பயன்பாட்டையும் நாம் நினைத்தாலும் இனி குறைக்க முடியாது போன்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அல்லது வாழப்பழகிக்கொண்டிருக்கிறோம்.
இதை ஒருபோலும் யாராலும் எவராலும் மாற்றவே இயலாது.
அதே சமயம் நாம் வாழும் பூமி நாம் பயன்படுத்தும் மின்சாரத்தால் பாதிப்பு அடையாததாக இருக்க வேண்டும்.
மின்சார பயன்பாட்டிற்கும் சுற்று சூழல் சீர்கேட்டிற்கு என்னப்பா சம்மந்தம்?
என்று கேட்டால்,
இதோ அந்த விளக்கம்
மின்சாரத்தை உற்பத்தி செய்ய நம் நாட்டில்,நம் நாட்டில் மட்டும் அல்ல உலகெங்கிலும் என்று சொல்லலாம்,இன்று இருக்கும் ஒரே எளிய வழி அனல்மின்நிலையம்(Thermopower
plant)நிலக்கரியை எரித்து அதன் மூலம் மின்சாரம் தயாரித்து அதை உபயோகப்படுத்துல்.
நிலக்கரியை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசு(carbon emission).இந்திய மின்சார துறை இயங்குவதே நிலக்கரி மூலம் தான் என்று சொல்லி விடலாம் ,ஏனெனில் இந்திய மின்சார தேவையின் 64% நிலக்கரி மூலமே பெற்றுக்கொண்டிருக்கிறோம். 1KWh (1Unit) மின்சாரம் நிலக்கரியை எரித்து தயாரித்தால் 950gm கார்பன் காற்றில் கலக்கிறது.
அதுமுழுவதுமாக வளிமண்டலிருந்து நீங்க 200 லிருந்து 400 வருடம் தேவைப்படுகிறது.
1 Unit மின்சாரம் கிடைக்க 950gm கார்பன் காற்றில் கலக்கிறது என்றால் ஒட்டு மொத்த இந்தியாவின் மின்சார தேவையில் 64% பூர்த்தி செய்யும் நிலக்கரியால் எவ்வளவு சுற்று சூழல் பாதிப்படைகிறது என்பதை கற்பனை செய்து பாருங்கள்...
சுற்று சூழல்(environment)மற்றும் புவி வெப்பமயம்(Global warming)ஆகுவதையும் குறைக்க தவறினால் , பருவ நிலை மாற்றம்(மழை பெய்ய வேண்டிய பருவத்தில் பெய்யாமல் காலம் தாழ்த்தி பெய்வது ,வெயிலின் தாக்கம் அதிகரித்திக்கொண்டே செல்லுதல்)என்பது கண்டிப்பாக நிலவி கொண்டே இருக்கும் என்பது அறிவியல் ஆய்வாளர்களின் கூற்று.
மேலும் நமது சந்ததி சம்பாதிக்கும் பணத்தை காட்டிலும் மருத்துவத்திற்கு செலவழிக்கும் தொகை கூடும் என்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
IPCC(Intergovernmental panel of climate change)என்ற அமைப்பு உலகம் சந்தித்து கொண்டிருக்கும் விசித்திரமான போக்கை கண்காணித்து கொண்டு வருகிறது.1950 களில் பூமியின் வெப்பம் 0 டிகிரி மாத்திரமே, 2020 ல் 1 டிகிரி யாக திடீரென்று அதிகரித்துள்ளது.அதற்கு மிக முக்கியமான காரணம் தொழில் துறை வளர்ச்சியும் தொழில் துறை வளர்ச்சியால் ஏற்படும் கார்பன் உமிழ்வும்.
1.5 டிகிரி வெப்பத்தை உலகம் அடைந்தால் இன்று ஏற்படும் நிகழ்வுகளை (கடுமையானமழை,காடுகளில் கட்டுக்கடங்காத தீ பற்றுதல் ,வெள்ளம் போன்ற)விட கடுமையாக ஏற்படும்,அந்த நாளை அடைய இந்த செய்தியை எழுதும் இந்த நாளிலிருந்து 5வருடம் 244 நாட்களே உள்ளது.இப்பக்கத்தின் கீழே ஓடி கொண்டிருக்கும் டிஜிட்டல் கடிகாரம் அந்த நேரத்தையே குறிப்பிடுகிறது.1.5 டிகிரி வெப்பத்தையும் அடைத்து 2 டிகிரி வெப்பத்தை உலகம் தொட்டு விட்டால் நாம் நினைத்தாலும் எதையும் மாற்ற இயலாது என்று Climate clock என்ற அமைப்பும் IPCC யும் அனைத்து நாடுகளையும் கடுமையாக எச்சரித்துள்ளது.
அதை குறித்தெல்லாம் எனக்கு கவலை இல்லை என்று சொன்னால், நிலக்கரி தட்டுப்பாடு கூடிய விரைவில் நிகழும் என்ற நிலையை அனைத்து நாடுகளும் எதிர்நோக்கிக் கொண்டி -ருக்கிறது.ஆகவே மின்சாரம் தயாரிக்க மாற்று வழி என்பது காலத்தின் கட்டாயம்.
மின்சாரம் உற்பத்தி செய்ய சோலார் யை போல் இன்னும் பல இயற்கை வழிகளும் உள்ளன. உதாரணத்திற்கு காற்றாலை(wind plant)அல்லது இயற்கை வாயு (biogas)மூலம்
தயாரிப்பது.ஆனால் சோலார் யை தவிர இவை அனைத்தும் வீட்டில் நாம் உற்பத்தி செய்ய இயலாது.அதை அமைப்பதற்கான செலவு மற்றும் பராமரிப்பு செலவு அதிகம்
மின்சாரத்தையும் பயன்படுத்த வேண்டும் ,அதே சமயம் குறைந்த விலையிலும் சுற்று சூழலை பாதிக்காத வழியிலும் உற்பத்தி செய்ய வேண்டும் என்றால்
"சோலார் இருக்க பயம் எதற்கு"
இது போன்ற எளிமையான தோற்றம் கொண்ட சோலார் பேனல்களை குடியிருப்பு/வணிக/ தொழில்துறை/கல்வி போன்ற கட்டிடங்களின் மேற்க்கூரையில் (மாடிகளில்) அமைத்து இலவசமாக மின்சார உற்பத்தி செய்யலாம்.